வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 30 வயது இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.