பாதுக்கை, போரேகெதர பிரதேசத்தில் இ.போ.ச பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (08) காலை 07.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.