தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு மற்றும் நுகர்வோருக்குத் தேவையான உப்புக்காக, உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரையின் பேரிலேயே, இவ்வாறு உப்பு இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பதனிடப்படாத மற்றும் அயடின் கலக்காத உப்பை தொழிற்சாலைகளுக்காகவும், அயடின் கலந்த உப்பை பொதுமக்கள் நுகர்வுக்காகவும் ஜூன் மாதம் 10ஆம் திகதிவரை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் உப்பின் உள்ளூர் தட்டுப்பாட்டை தவிர்த்து, சந்தை நிலைத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.