மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் கடந்த 07ஆம் திகதி இரவு இடம்பெற்றது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரிதுபட்டு, அதன் விளைவாக முச்சக்கரவண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகள் தற்போது நல்லதண்ணி பொலிஸார் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

