கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், டிப்பர் வாகன சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் ஏப்ரல் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றது. தனது வீட்டில் இருந்த டிப்பர் வாகனத்தை தந்தை செலுத்திய போதே, அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்ரமணியம், உடற்கூற்று விசாரணைகளுக்குப் பிறகு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.