யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (09) முற்றுகையிட்டனர்.
நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அந்த வீடு, சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கி வந்தது. சோதனையின் போது, வீட்டு உரிமையாளர், 68 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், அளவெட்டி, குருநகர், கொடிகாமம் பகுதிகளை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.