மாத்தளையில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சுனாமி கிராம திட்டத்தில் வசிக்கும் மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவர்.
பெண் மருத்துவர் அவரது பணியிட வளாகத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கிராம உத்தியோகத்தர்களுக்கு பணியிட பாதுகாப்பு வேண்டி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
முழு சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக மாறிவிட்டிருக்கிறது. 22 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் யாரும் பெண்களின் பணியிட பாதுகாப்பு, அச்சுறுத்தலான சமூக சூழல் பற்றி கதைக்கவில்லை.
அப்படி கதைக்காததைக் கூட விட்டுவிடலாம். MP அர்ச்சுனா ஒரு பெண்ணை பெயர் கூறி விபசாரம் செய்பவர் என்று நாடாளுமன்றத்தில் சொல்கிறார். மிக மோசமான ஆணாதிக்க வக்கிரமான பேச்சுகளைப் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கண்டிக்காமல் அமைதியாக இருப்பது ஆபத்தானது.
தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு விபசாரப் பட்டம் சுமத்துவது முகநூலில் செய்வது போய் இப்போது நாடாளுமன்றம் வரை வந்து நிற்கிறது என சமூக ஊடகங்களில் மக்கள் தமது ஆதங்கங்களை பதிவிட்டுள்ளனர்.