சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை வந்த இரு இளம் பெண்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் தகவலின்படி, அவர்கள் இருவரும் 28 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட மதிப்புள்ள தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

