மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் (14) வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து , ஹயஸ் சாரதியை கைது செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.