வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் முழுமையாக பார்வை இழக்கச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் உட்பட இரண்டு சந்தேக நபர்களுக்கு 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று குற்றவாளிகள் 2013, பெப்ரவரி 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.unga
அசிட் தாக்குதலில் முன்னாள் ஆணையாளர் குமார அல்விஸ் முகத்தில் அதிக காயங்களுக்குள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், முழுமையாக பார்வையிழந்தார்.