முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 07) காலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளிக்க வந்த போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் இத்தகவலை வெளியிட்டார்.
சமீபத்தில், மஹிந்த ராஜபக்ச உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், “என் தந்தை நல்ல உடல்நிலையில் உள்ளார்” என்று நாமல் உறுதியாக தெரிவித்தார்.
இத்தகவல், மஹிந்த ராஜபக்ச உடல்நிலையில் அச்சம் கொண்டிருந்த அவரின் ஆதரவாளர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

