அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தபால்மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணிக்கு வருவோம் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எந்தவொரு விசாரணையும் இல்லாமல் தபால்மா அதிபரால் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
சமீபத்தில் ஹப்புத்தளையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் துறை ஊழியர்கள் தங்கள் கைரேகையைப் பதிக்காமல் கோடிக்கணக்கான மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுள்ளதாகவும், தபால் சேவையில் நிகழும் பல முறைகேடுகள் குறித்தும் கருத்து வௌியிட்டிருந்த நிலையிலேயே குறித்த கருத்து தொடர்பில் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.