இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைய நாட்களில் இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.