2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களின் ஒன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அதன் மொபைல் அப் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2021 க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 முதல் 30 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

