ரஷ்யா வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஸ்யா இதனை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த பத்து பேரின் உடல்களும் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரங்களோடு ஒத்துப்போகின்றன என விசாரணை குழு தெரிவித்துள்ளது. மூலக்கூறு மரபியல் சோதனைகள் இடம்பெற்றன,
அதனடிப்படையில் உயிரிழந்த பத்துபேரினதும் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது. மேலும் வாக்னர் தலைவரின் விமான விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்ய கூலிப்படை தலைவர் விமான விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.