யாழ்ப்பாணத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.