மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், பனிக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மாவீரர் பொது படத்துடன் விசுவமடு சந்தியிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வணக்க நிகழ்வுகளும் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

