போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல நேற்று (09) இந்த தண்டனையை விதித்துள்ளார்.
மன்னாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், ஐஸ் என்ற போதைப் பொருளைக் கொண்டு சென்றபோது, கடந்த 2022 நவம்பர் 03 ஆம் திகதி எழுத்தூர் சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை அறிவிக்கும் போது, வழக்குத் தொடுப்பவரால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தண்டனை விதித்துள்ளார்.