பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகளான சரண்யாவிற்கு குழந்தை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ். இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பாக்யராஜிற்கு சந்தணு மட்டுமல்ல அவருக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார்.
இவர் சாந்தணு சினிமாவிற்குள் வர முன்னர் “பாரிஜாதம்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பாக்யராஜ் தன்னுடைய மகள் பற்றி பெரியதாக வெளி இடங்களில் பேசுவதில்லை. இதனால் மகளை ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
மேலும் சாந்தணு- கிகி இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் மகளின் செய்தி வெளியாவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது.
மாறாக சமீபத்தில் சரண்யா பேசுகையில், “ என்னிடம் Hand bag இல்லை. பாப்பாவின் டயப்பர் பேக் மாத்திரமே உள்ளது. அத்துடன் வேசிலின் மற்றும் தலைவலி தைலம் மட்டுமே உள்ளது. குழந்தைக்கு தேவையான ஆடை மற்றும் அவரின் பாட்டில்ஸ் உள்ளன..” என சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.
சரண்யாவிற்கு குழந்தை இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரண்யாவிற்கு இதுவரையில் திருமணம் ஆகவில்லை. சரண்யாவிற்கு அப்படி எப்படி குழந்தை வந்தது.
இன்னும் சிலர் சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என பல்வேறு வகையில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.