நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பமாகிறது.
இந்த விசாரணை வெல்லிங்டன் நீதிமன்றத்தில் நாளை (09) ஆரம்பமாகிறது. முன்னதாக, 2019 மார்ச் 15 அன்று பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இவர் நடத்திய தாக்குதல் உலகையே உலுக்கியது.
இந்த வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து அவர் தற்போது மேன்முறையீடு செய்துள்ளார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தான் முன்னதாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை திரும்பப் பெறவும் அவர் அனுமதி கோரியுள்ளார்.

