நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சோதனை நடவடிக்கையின் போது 28,778 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.