இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தவர் சட்டப்படி யாழ்ப்பணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தி இருந்து நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பதிவிட்டுள்ளதாவது ,
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது? எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.