காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் தனது நண்பர்கள் ஐவருடன் கடற்கரை பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் பிரதேச மக்களால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த மாணவன் நேற்று (09) பூனொச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதிய காத்தான்குடி நூராணியா வித்தியாலயத்தில் 11 ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.