இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.