குளியாப்பிட்டி-மடம்பே சாலையில், கனதுல்ல பகுதியில், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற வேன் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வேன் முந்திச் செல்ல முயன்றபோது இந்த மோதல் நிகழ்ந்தது.
இதன் விளைவாக, மோட்டார் சைக்கிள் முன்னோக்கிச் சென்று, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பயணித்த பெண் பயணியும் பலத்த காயமடைந்து குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் பதுலுஓயாவைச் சேர்ந்த 23 வயதுடையவர். பெண் பயணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநரும், பஸ் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.