பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
இந்திய சென்ற ரணிலை வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புப் பணி பிரிவின் அதிகாரி பி குமரன் வரவேற்றுள்ளார்.
“பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சபையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி வந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா இன்று மாலை டெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது.

