எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றி வளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பல்வேறுபட்ட இடங்களில் அதிகரிக்கப்பட்ட விலைகளின் கீழ் சில வர்த்தகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் அரிசியினை விற்பனை செய்வதாகவும் அரிசி தொகையைப் பதுக்கி வைப்பதாகவும் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் நிறைவடைந்த காலப்பகுதியினுள் அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த ஐந்நூறுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.