தற்போது பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், உப்பின் விலை சந்தையில் கடுமையாக அதிகரித்து காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிக இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உப்பு விலை நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க இதன்போது எச்சரித்துள்ளார்.