பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கற்றல் நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் புதிய மாணவர்களிடைம் இருந்து பொருட்களை பெற்றுள்ளதாகவும் மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

