உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)
உதவி பெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு).
3 வது கொடுப்பனவு
இடம்:கிளிநொச்சி
உதவித் தொகை:60.000,00
அன்பான உறவுகளே!
கடந்த கால யுத்தத்தில் தனது காலை இழந்த குடும்பத்தலைவனின் பிள்ளைகளின் கல்வியை ஊக்கிவிப்பதற்கு கடந்த நான்கு வருடங்களாக மாதம் 5000,00 வீதம் உதவி வருகின்றோம்(சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21வது பிறந்த நாள் 21.01.2023 இன்னாளில் ஒருவருடத்திற்கான
60.000,00 ரூபாய் நிதியினை வழங்கியிருந்தார்கள் அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது லண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர்
திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். “இந்த கொடுப்பனவு பிந்தியதற்காக மனம் வருந்துகின்றோம்” அத்துடன் இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய கிளிநொச்சி பகுதிகளுக்கான எமது செயற்பாட்டாளர் செல்வன் ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி.
திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி(சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21வது பிறந்த நாள்-கல்வி ஊக்கிவிப்பு-உதவித் தொகை:60.000,00 HelpingHearts Germany
Previous ArticleATM கொள்ளை; 22 வயது இளைஞர் கைது! -Karihaalan news
Next Article இன்றைய ராசி பலன் -31.01.2023-Karihaalan news