கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.