ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்து வகையான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவை ஓகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி, 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

