நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு
“என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்குச் செல்லும்போது, தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறினார்.
மேலும், தனது ‘சிக்மா’ (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை. எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

