இளம் பெண்ணொருவர் தனது 3 ஆவது பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சத்தாரா மாவட்ட அரச வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கோரேகாவ் பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா என்ற 27 வயதான கர்ப்பிணி ஒருவர் மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அப்பெண் 4 குழந்தைகளை வயிற்றில் சுமந்து வந்துள்ளமை தெரியவந்தது.
எனவே நிலைமையின் தீவிரத்தையும், தாயின் பலவீனமான உடல்நிலையை கருத்தில் கொண்டும் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவத்துக்கு முடிவு செய்யப்பட்டது.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவர் டாக்டர் சிதாசிவ் தேசாய், டாக்டர் துஷார் மஸ்ராம், மயக்க மருந்து நிபுணர் நீலம் கடம் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழு மேற்கொண்டது.
இதன்போது 4 குழந்தைகளும் தாயின் வயிற்றில் இருந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்டன.
இவ்வாறு எடுக்கப்பட்ட குழந்தைகளில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் அடங்குகின்றது. இதேவேளை தாயும், 4 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும், அரிதான நிகழ்வு என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
4 குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. இதனால் காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.