முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை உருவாக்கி, விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இருவரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கின் தொடர்ச்சியான விசாரணை இன்று இடம்பெற்றபோது, மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர, மற்றும் ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் ஜூன் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், பிரசன்ன ரணவீரவால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையும் நீதவான் நிராகரித்தார்.
இந்த வழக்கு, அரச சொத்துக்களில் போலி ஆவணங்கள் மூலம் திருட்டுத்தனமான விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான முக்கியமான சட்டப்பூர்வ நடவடிக்கையாகும். விசாரணையின் அடுத்த கட்டங்களில் மேலும் முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.