இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவரது மனைவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதனை காட்டும் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.
அதில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளால் ஷிராந்தி ராஜபக்ஷவின் காலணிகளை எடுத்துச் செல்வதை காட்டுகிறது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச மனைவி அதிகார திமிரில் செய்த செயற்பாடு இது என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.