யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத் இதற்கான அனுமதிப்பத்திரங்களை மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைத்தார்.
கையளிக்கப்பட்ட காணிகள் வலிவடக்கு, வசாவிளான் – 20 ஏக்கர், மாங்கொல்லை – 15 ஏக்கர், வடமராட்சி கற்கோவளம் – 5.7 ஏக்கர்
முன்னதாக, இந்த நிலங்களில் வெடிபொருட்கள் உள்ளதா என்பதைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் மக்கள் வசிப்பதற்காக இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.