கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரைப் பார்க்கச் சென்றபோதே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.