எதிர்நீச்சல் சீரியலில் தனது மகளின் சடங்குக்கு முறை செய்வதில் நந்தினி தனது சுயரூபத்தை காட்டி அரிவாளையும் கையில் எடுத்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை நந்தினியால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது உச்சக்கட்ட கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
நந்தினியின் கோபத்தினை அவதானித்த ஒட்டுமொத்த குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றனர். அதிலும் அறிவுக்கரசி மற்றும் கதிரின் ரியாக்ஷன் ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.