மனிதர்கள் இதுவரை பாராத, ஒரு புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அறிவியல் உலகில் முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பார்க்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள், “ஓலோ (Olo)” எனப் பெயரிட்டுள்ள இந்த புதிய நிறத்தை லேசர் ஒளியின் உதவியால் உருவாக்கியுள்ளனர்.
வழக்கமாக, மனிதர்களின் கண்கள் L (சிவப்பு), M (பச்சை), S (நீலம்) எனும் மூன்று வண்ண அலைநீளங்களை அடிப்படையாகக் கொண்டு நிறங்களை உணருகிறது. ஆனால், இந்த புதிய முயற்சியில் M வகை கோன்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு, புதிய ஒளிப் பிரதிபலனாக ஒரு வித்தியாசமான நிறம் தோன்றியுள்ளது.
இந்த நிறம்:
-
இயற்கையில் காண முடியாது.
-
வெறும் கண்களால் பார்க்க முடியாது.
-
லேசர் ஒளியின் மூலம் மட்டும் பார்வையிட முடியும்.
இதைப் பார்த்தவர்கள், இது நீலம் மற்றும் பச்சை கலந்ததுபோல் இருந்தாலும், வழக்கமான வண்ணங்களைப் போல் இல்லாததாகக் கூறியுள்ளனர். இந்த புதிய நிறம் டிஜிட்டல் திரைகளில் காண முடியாதது. மனித மூளை இதனை எப்படி புரிந்துகொள்கிறது என்பது இன்னும் ஆய்வுக்குறிய விஷயமாக இருக்கிறது.