6.700 கிலோகிராம் தங்கத்தை வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து, சூட்சுமமாக இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.210 மில்லியன் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர், கண்டி, ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர்
இவர்கள் இருவரும் டுபாயிலிருந்து நேற்று (15) காலை வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். விமான நிலைய வர்த்தகப்பாதை எனப்படும் ‘ரக்த மாவத்தை’ வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை சோதனையிற்குட்படுத்தினர்.
சந்தேக நபர்கள் முன்னர் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் வர்த்தக பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்ட தங்கம், வாகன உதிரிப்பாகங்களில் நுணுக்கமாக மறைக்கப்பட்டு நாட்டுக்குள் கடத்தப்பட முயற்சி செய்யப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மற்றும் தங்கம் இன்று (16) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

