இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46ஆயிரத்து 868 ஐ கடந்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14 ஆயிரத்து 221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் இது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 30.3% ஆகும்.
மேலும் இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 171 பேரும் ஜெர்மனியிலிருந்து 2ஆயிரத்து 652 பேரும் சீனாவிலிருந்து 4ஆயிரத்து 416 பேர் மற்றும் பங்களாதேஷிலிருந்து 2ஆயிரத்து 158 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.