கொழும்பு – தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர் ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் தலங்கமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.