நாட்டில் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார். மேலும், கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் பேராயர் இல்லத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவாக, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சிறப்பு திருப்பலிகள் பல தேவாலயங்களில் நடைபெறவுள்ளன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனி தேவாலயம், கட்டுவாபிட்டியாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.