18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதனால் குஜராத் அணிக்கு 153 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன் வசமாக்கியது.