மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் , அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மெதகம தம்மானந்த தேரர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜனாதிபதி உட்பட அனைத்து பிரதிநிதிகளும் பதவி விலக வேண்டுமென தொடர்ந்தும் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

