ஈரான் போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், வொஷிங்டனும் தெஹ்ரானும் பகைமையைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் திங்களன்று (23) சரிந்தன.
காலை நேர வர்த்தகத்தில் ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கெய் 225, 3.4% சரிந்தது.
அதே நேரத்தில், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) சுமார் 5% வீழ்ச்சியடைந்தது.
ஜப்பானும் தென் கொரியாவும் இந்த மோதலால் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏனெனில் அவை பொதுவாக அந்த நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் சார்ந்துள்ளன.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பிற சந்தைகளும் திங்கட்கிழமை அன்று சரிவைச் சந்தித்தன.
ஹொங்கோங்கின் ஹேங் குறியீடு 2.5% சரிந்தது மற்றும் தைவான் வெயிட்டட் இன்டெக்ஸ் 2% இழந்தது.
உலகளாவிய எண்ணெய் விலைகள் பெரும்பாலும் நிலையாக இருந்தன; பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 0.2% குறைந்து $112 (£84) ஆகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் 0.3% அதிகரித்து $98.57 ஆகவும் இருந்தது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதிலிருந்து, உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறம்படத் தடுத்துள்ளது.

