எதிர்பார்த்ததை விட கேள்வி குறைவாக இருந்தால், வாகனங்களுக்கான வரிகளை இலங்கை குறைக்கக்கூடும் என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கையிருப்புக்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணியில் வரம்பு இருப்பதால் மத்திய வங்கி ஒரு வழிகாட்டியை வழங்கியுள்ளது என்று அமைச்சர் ஜயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
விலையை அதிகரிக்க வரிகளை மாற்றுவதாகவும், அதன் பின்னரான நடப்பு விவகாரங்களை கருத்திற் கொண்டு இறக்குமதி வரிகளைக் குறைக்க முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளில் கடன் கடிதங்களைத் திறப்பதில் உள்ள ஆர்வம் இருந்த போதிலும் அதில் அதிகரிப்பு இல்லை என்று பிரதி அமைச்சர் கூறினார்.
இலங்கை வாகனம் தொடர்பான வரிகளில் சுமார் 700 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.
வாகன இறக்குமதிகள் வரிகளை வசூலிப்பதற்காக மட்டும் தளர்த்தப்படவில்லை எனவும், பொருளாதார அபிவிருத்திக்கு அது உதவும் என்று அமைச்சர் ஜயந்த கூறினார்.
அந்த நடவடிக்கைகள் வருமானத்தையும் உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.