நாட்டின் எந்த மேயரும் பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்குகிழக்கில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எவ்வாறு செயற்பட்டது என்பது மக்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்நகர மேயருக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

