மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் மக்கள் பதற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய பொசன் விழா கொண்டாட்டங்கள் பதுளை கைலகொட மிஹிந்து பெரஹெரா நேற்று இரவு (10) பதுளை நகரில் இடம்பெற்றது.
இந்த பெரஹெரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா விகாரையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் பெரஹெரா சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது வீதி உலாவில் ஈடுபட்ட யானையொன்று திடீரென குழம்பியதால் பெரஹெராவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்திற்குள் யானை, பாகனால் அமைதிப்படுத்தியதை அடுத்து, பெரஹெரா மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.